THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Friday, July 16, 2021

திருக்குறளில் அரசியல் சிந்தனைகள் POLITICAL IDEAS IN THIRUKKURAL

 



முன்னுரை:

   வாயுறைவாழ்த்து மூன்று பால்களாக முதற்பாவலர் பகுத்துள்ளார். அவற்றில் ஒன்றான பொருட்பாலில், சிறந்த நாட்டுக்குத் தேவையான மக்கள் நல அரசையும், அரசனின் தலைமையும், குடிமக்களின் கடமையும் எளிமையாக விளக்கியுள்ளார். 

"அரசியல் ஐந்து, அமைச்சியல் ஈரைந்து"

எனும் புலவர் போகியார், பழைய வெண்பாப் பாடல் மூலம் அரசனின் அரசாட்சியை குறித்து சுருக்கமாக கூறியுள்ளார். மேற்கண்டவாறு வாயுறைவாழ்த்தில் உள்ள அரசியல் சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


அரசனின் ஆறு கூறுகள்:

     "படை குடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்

      உடையான் அரசருள் ஏறு"

என்னும் குறட்பாவில் சிறந்த போர் படை, வறுமையற்ற குடிமக்கள், உணவு, அமைச்சு, வெளியுறவு பாதுகாப்பு, பாதுகாப்பு படை ஆகிய ஆறு அங்கங்களும் ஒரு நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்ய அரசனுக்கு வேண்டிய அமைப்பு முறை ஆகும்.


அரசு, அரசன், ஆட்சிமுறை பற்றிய 25 அதிகாரங்கள்:

     பொருட்பாலில் 39 முதல் 63 வரையுள்ள அதிகாரத்தில் மன்னன், அரசு, அரசாட்சி, அரசாட்சி முறைகள், பண்புகள், செயல் வகைமைகள் பற்றி வகுத்துள்ளார்.


நலம்புரி அரசு:


     "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 

      இறையென்று வைக்கப் படும்"


என்னும் குறட்பாவில் ஒரு அரசின் சிறந்து விளங்க, நீதி நெறி வழுவாமல் நடுநிலைமையோடு நின்று குடிமக்களை காப்பாற்றுவான் எனின், அம்மன்னன் இறைவனுக்கு ஒப்பாக வைக்கப்படுவான். அவ்வாறு சிறந்த பண்புகளை கொண்டு மக்கள் நல ஆட்சி முறைப்படி ஆட்சிபுரிந்து மக்களை காக்கும் அரசன், கடவுளுக்கு இணையாக கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர்.


அரசனின் தலைமை:

    "மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே"

      மன்னன் ஒருவன் அறநெறி வழுவாமல் நடுநிலை தவறாமல், மானம் காத்த ஆட்சிபுரியவனானால், குடிமக்களும் அரசனின் வழிகாட்டின்படி தீமைகளை நீக்கி, மறம் வழுவாது வாழ்வர். அவ்வாறு ஒரு நாட்டின் சிறப்பு, ஆட்சி செய்யும் அரசனை சார்ந்தது; ஒரு நலம்புரி அரசின் சிறப்பு, அறநெறி தவறாமல் வாழும் குடிமக்களை சார்ந்தது.


மழைக்கு ஒப்பானது செங்கோல்:

    உலக உயிரெல்லாம் நிலையாக நீடித்து வாழ நீர் தேவைப்படுகிறது, அதுவும் பெரும்பாலும் மழை நீரை சார்ந்துள்ளது. அதுபோல் நாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரும் மன்னனின் 'செங்கோன்மை' சார்ந்து வாழ்வர். இதனை,

     "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

      கோல் நோக்கி வாழும் குடி"

எனும் குறட்பா மூலம் குறிப்பிடுகிறார்.


அரசனின் அடிகளே குடிமக்களின் அச்சாணி:

    "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் 

     அடிதழீஇ நிற்கும் உலகு"

     என்னும் குறட்பாவில் குடிமக்கள் வருந்தாமல், பசியில்லாமல், வறுமை பஞ்சம் இல்லாமல் ஆட்சி புரியும் அரசனுடைய திருவடிகளை புரிந்திருக்குமாம் உலகம். அவ்வாறு குடிமக்களின் அறநெறி பண்பும், நல்லொழுக்கம் கொண்டு அன்போடு அரவணைத்து வாழும் அரசனை, உலகம் போற்றும் என்கிறார் வள்ளுவர்.


முறைசாரா ஆட்சியின் விளைவு:

      "வேலோடு நின்று இடுவென் றதுபோலும்

       கோலொடு நின்றான் இரவு"


     "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

      செல்வத்தைத் தேய்க்கும் படை"


     மேற்கண்ட குறட்பாக்கள் கொடுங்கோலாட்சி செய்யும் அரசனை எச்சரிக்கும் குறட்பாக்கள் ஆக அமைந்துள்ளது. உலகில் கொடுங்கோல் செய்யும் அரசர்களுக்கு எதிராக வள்ளுவரின் குறட்பாக்கள் எச்சரிக்கும் குரலாக உள்ளன.


வருவாயின் வழிகள்:


    "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

      வகுத்தலும் வல்லது அரசு"


(இத்திருக்குறளை சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டது.)

   நாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரும் மன்னரின் வழிவகை படி அறத்தின் வழியில் பொருள் இயற்றல் வேண்டும், பின் அப்பொருளின் மூலம் வருவாயை திரட்டி சரியான முறையில் காத்தல் வேண்டும். அவ்வாறு திரட்டிய நிதியை சரியான முறையில் நிர்வாகம் செய்தல் வேண்டும் என வள்ளுவர் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என வருவாய் வழிமுறைகளை வகுத்துள்ளார்.


முடிவுரை:

      அரசு, அரசன், அரசாங்கம், ஆட்சிமுறை முதலியவற்றின் ஊற்றாக அமைந்திருக்கும் பொருட்பாலில் வள்ளுவர் தனது அரசியல் சிந்தனைகளை கற்பனைக்கு இடம் தராமல் சரியான முறையில் வலியுறுத்தியுள்ளார். தற்கால அரசியல்வாதிகள், பொருளாதார அறிஞர்கள் அறிஞர்கள் ஆகியோர்கள் மேற்கோள் காட்டும் வகையில் 2000 ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட வள்ளுவர் பெருந்தகையின் குறள் அமைந்துள்ளது வியப்புக்குரியது. மேலும் மன்னராட்சி/முடியாட்சி காலத்திலேயே அரசர்களுக்கு அஞ்சாமல் குடிமக்களுக்காக 'குடியாட்சி' அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.











GOOGLE search keywords:

திருக்குறளின் அரசியல் சிந்தனைகள், திருக்குறளில் அரசியல், திருக்குறள் கட்டுரை அரசியல், அரசியல் சிந்தனை திருக்குறள் கட்டுரை, வள்ளுவரும் அரசியலும், அரசியல் குறித்து வள்ளுவர், மக்கள் நலம் அரசு வள்ளுவர், மக்கள் நலம் அரசு திருக்குறள் கட்டுரை, அரசன் குறித்து திருக்குறள் கட்டுரை, அரசு குறித்து திருக்குறள் கட்டுரை, மக்களாட்சி திருக்குறள் கட்டுரை, நலம் பேணும் அரசு திருக்குறள் கட்டுரை, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, welfare state thirukural essay, political ideas in thirukkural, thirukural essay political ideas, political thoughts in thirukkural, welfare country thirukkural, revenue THIRUKKURAL ESSAY, economics thirukural, politics THIRUKKURAL ESSAY



4 comments:

  1. Thanks for sharing such a great article and it's helpful for everyone. Great Post!.. Latest posts

    ReplyDelete
  2. ...
    Thanks for sharing such a great article and it's helpful for everyone. Great Post!.. Latest posts

    ReplyDelete