THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Wednesday, June 30, 2021

திருக்குறள் உணர்த்தும் அறம் MORAL ETHICS INSTRUCTION IN THIRUKKURAL



முன்னுரை:

     சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பதினெண்-கீழ்க்கணக்கு நூல்கள் என்கிறோம். இவ்விலக்கியங்கள் இருண்ட காலத்தில் நிலவிய சூழ்நிலையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய இலக்கியங்களை நீதி இலக்கியங்கள் என்கிறோம். நீதி நூல்களில் ஒன்றான திருக்குறளில் வள்ளுவர் கூறிய அறங்களை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைய உள்ளது.

அறம் விளக்கம்:

     அறம் என்ற சொல்லை இரண்டாக பிரிக்கலாம். அவை தனிமனித அறம், சமூக அறம் என்பதாகும். அறம் என்பது விருந்தோம்பல், கொடை, மற்றவர்க்கு உதவுதல், பிறருக்கு ஊறு விளைவிக்காமல் இருத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை கூறலாம். சமுதாயத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ள அற செயல்பாடுகள் அனைத்தும் சமூக அறம் எனலாம். அவ்வகையில் திருக்குறள் காட்டும் தனிமனித, சமூக அறங்கில் பின்வருமாறு காணலாம்.


சமூக அறம்:

     இல்லறவியலில் ஒரு அதிகாரமாக நிகழக் கூடியது ஒழுக்கம் உடைமை ஆகும். ஒழுக்கமுடைமை அதிகாரம் மானுட சமூக மேம்பாடு அடைவதற்கு உண்டான வழிகளைக் கூறும் விதமாக அமைந்துள்ளது.

     "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

      உயிரினும் ஓம்பப் படும்"


என்ற குறட்பாவில் ஒருவருக்கு உயிரை விட மேலானது ஒன்றும் இல்லை எனலாம். பத்தவே உயிரானது இன்பத் துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. உயிரை விட மேலான பொருள் ஒன்று உண்டெனில் ஒழுக்கத்தை கூறலாம். ஒழுக்கம் என்பது மானுட பிறப்பதற்கே உரிய ஒன்றிய நலம் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கும் ஒருவன் மேம்பாடு அடைகிறான்.

     "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 

     இழிந்த பிறப்பாய் விடும்"


ஒருவன் உயர்ந்த குடியில் பிறப்பதால் அவன் சிறந்த பண்பு உடையவன் என்றும் தாழ்ந்த குடியில் பிறந்த ஒருவனை தீய பண்புகள் என்று கூறமுடியாது. ஒருவன் எப்படியிருப்பினும் அவன் ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் அவன் உயர்ந்தவன் ஆகவே கருதப்படுகிறான்.


அன்புடைமை:

     சமுதாயம் முன்னேற வேண்டுமானால் மனிதனிடம் உள்ள தீய குணங்களை நீக்கி பிற உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும். அன்பு தான் மனிதனை மனிதனாக்குகிறது. அன்பு வழியை பின்பற்றினால் நாம் எத்தகைய துன்பத்தையும் வென்றிடலாம். அத்தையா அன்பில்லாத ஒருவனை வள்ளுவர் எலும்புக் கூட்டின் மீது போல் பொருத்தப்பட்ட வெற்று உடம்பு என்கிறார். இதனை,
    

 "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

     எலும்பு தோல் போர்த்திய உடம்பு"



இல்வாழ்க்கை:

     மனித வாழ்வில் முதலில் பின்பற்றத் தக்கது இல்லற நெறி ஆகும்.

     "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

      தெய்வத்துள் வைக்கப் படும்"

இவ்வுலகில் நல்ல முறையில் இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு ஒப்பாக கருதப்படுவாள் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

விருந்தோம்பல்:

     திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி கூறுவதற்கு வள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை படித்துள்ளார். அதிகாரத்தின் மூலம் விருந்து பற்றியும் விருந்து அளிக்க கூடிய மக்களின் பண்புகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
     

     "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

      வேளாண்மை செய்தற் பொருட்டு"


என்ற குறளின் மூலம் இல்வாழ்க்கையில் ஈடுபடக் கூடியவர்கள் பொருளை சேமித்து மட்டுமல்லாமல், விருந்தினர்களுக்கு விருந்து அளிக்கும் வேண்டும் என்ற பதிவினை மக்களுக்கு எடுத்தியம்புகிறார்.

     வீட்டிற்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன் உபசரித்து அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். விருந்து அளிக்கும் போது நம் முகம் சிறிதேனும் வாடி இருந்தால் விருந்தினர்களின் முகமும் வாடும் என்பதை,
     

     "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

      நோக்கக் குழையும் விருந்து"


என்ற குறளின் வழி வள்ளுவர் அனிச்சமலர் ஆனால் அது எப்படினு வருவதுடன் வாடிவிடும் அதுபோல் நம் முகத்தில் சிறிது மாற்றம் ஏற்படும் வரும் விருந்தினரின் முகமும் வாடும் என்ற கருத்தினை எடுத்துரைக்கின்றார்.

உயிர் கொல்லாமை:

     எந்த ஒரு உயிரையும் கொலை செய்யாது, புலால் உண்ணாது வாழ்பவர்களை இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
     

      "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

       எல்லா உயிரும் தொழும்"

என்ற குறள் புலால் மறுத்தலை வலியுறுத்துகிறது.

     நெய் முதலிய பொருள்களை வேள்வியில் செய்யும் யாகத்தால் விளையக் கூடிய நன்மை விட அதிகமான நன்மை, ஒரு உயிரை கொள்ளாது இருப்பதின் மூலம் விளைகிறது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.


ஆசையை விடுதல்:

     மனித வாழ்வை அடிப்படையானது ஆசை எனலாம். தனிமனித பேராசைதான் நாட்டில் தலைவிரித்தாடும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் எனலாம். லஞ்சம், ஊழல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் எனலாம். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தான் ஒருவனே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
     

 "அவா இல்லாருக்கு இல்லாரும் துன்பம் அஃதுண்டேல்

      தவாஅது மேன்மேல் வரும்"


என்ற குறள் பேராசை பட்டோருக்கு துன்பங்கள் தொடர்கதையாகும் என்ற எச்சரிக்கையை விடுத்தது போல அமைகின்றது.


கல்வி:

     "கற்க கசடற கற்பவை கற்றபின்

      நிற்க அதற்குத் தக"


கல்வி இன்றைய வாழ்விற்கு அவசியமான ஒன்றாகும். ஆதலால் அனைவரும் கல்வி கற்க வேண்டும். கற்கும் நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு அதனை தன் வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

வாய்மை:

     எப்போதும், எந்த இடத்தும் உண்மையே பேச வேண்டும். நாம் பேசக்கூடிய சொற்கள் மற்றவர்களுக்கு தீங்கு தரக் கூடியதாக இருக்கக் கூடாது. எப்போதும் தீமை இல்லாத சொற்களை சொல்ல வேண்டும்.
     

      "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

        தீமை இலாத சொல்"


ஒருவன்தன் நெஞ்சுஅறிந்து பொய் சொல்லக்கூடாது. அப்படி அறிந்தும் பொய் சொன்னான் என்றால் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


செய்நன்றி மறவாமை:

     மற்ற உயிர்களிடம் இருந்து மனிதனை தனிமைப் படுத்திக் காட்டுவது அவனுடைய ஆறாவது அறிவுதான். அவர் இவனது நல்ல தீய விஷயங்களை பகுத்து அறிந்து கொள்வதற்கு தான் இறைவனால் படைக்கப்பட்டது. மனிதன் போற்ற வேண்டிய செயல்பாடுகளில் ஒன்று நன்றி மறவாமை ஆகும். ஏனெனில் எவ்வகை பாவம் செய்து ஒழுகும் அதிலிருந்து மீள்வதற்கு வழி உண்டு. ஆனால் செய்நன்றி மறந்த அவனுக்கு அதிலிருந்து மீள்வதற்கு எந்த வழியும் இல்லை எனலாம்.


     "காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

      ஞாலத்தின் மாணப் பெரிது"


என்ற குறட்பாவில் நம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களை உடலில் உயிர் உள்ளளவும் மறுத்தல் கூடாது என்பதை இக்கருத்துக்கள் உணர்த்துகின்றன. ஆனால் இன்று உயிர் கொடுத்து, உரு கொடுத்து, உணவு ஊட்டி வளர்த்து ஆளாக்கி பெற்றோரை பாரமாக கருதும் அவல நிலை பெருகிவருகிறது. செய்நன்றி மறந்த நிலையை தான் இன்றைய முதியோர் இல்லங்கள் நினைவூட்டுகின்றன. இன்றைய சூழலில் மனிதர்களிடம் வளர வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்றாகும். 


முடிவுரை:

     சமூகத்தில் அறப்பண்பு வளர வேண்டும். உயிர் கொலை செய்யாமை, நன்றி மறவாமை, விருந்தோம்பல் பண்பு, வாய்மை, கல்வி, இல்வாழ்க்கை, அன்புடைமை, ஒழுக்கமுடைமை முதலிய பண்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் நம் வாழ்வு சிறந்து விளங்கும் என்பதை வள்ளுவரின் வாக்கு மூலம் உணர முடிகிறது. இச்சமூகம் சிறப்பாக அமைவதற்கு உண்டான வழிமுறைகளை உணர்த்தும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.












GOOGLE SEARCH KEYWORDS:
MORAL ETHICS IN THIRUKKURAL, MORAL ETHICS INSTRUCTIONS, HUMAN LIFE ETHICS, THIRUKKURAL ESSAY HUMANIY, HUMAN LIFE MORAL ESSAY, ESSAY ABOUT THIRUKKURAL , THIRUKKURAL ESSAY FAMILY, HUMAN ESSAY , THIRUKURAL HUMANITY ESSAY, MORAL LIFE ESSAY , everyday life Thirukkural essay, impact of humanity, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, ESSAY MAINS WRITING
திருக்குறள் உணர்த்தும் அறம், அறம் திருக்குறள் கட்டுரை, வாய்மை திருக்குறள் கட்டுரை,. அன்றாட வாழ்வியல் திருக்குறள் கட்டுரை, சமூகம் திருக்குறள் கட்டுரை, சமுதாயம் திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வியல், மானுட தாக்கம்

2 comments:

  1. திருக்குறளை உலகமே பின்பற்றுகிறது, அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அறத்தை முன்னிருத்தி பொதுமறையை படைத்ததே...நன்றி உலகப்பொதுமறையை இணையவழியில் பதித்ததற்கு.

    ReplyDelete