THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Monday, June 28, 2021

"திருக்குறளில் அரச நீதி" Political Justice In Thirukkural

 




முன்னுரை:

     தனி மனித வாழ்க்கைக்கும், உலக பொது வாழ்க்கைக்கும் வழி காட்டும் ஒப்பற்ற உயர் நூல் திருக்குறள். நல்லவை எவை, அல்லன எவை, கடமைகள், நற்பண்புகள், நற்செயல்கள் முதலியவற்றை வலியுறுத்தும் நூல் திருக்குறள். இவ்வாறு தனி மனித ஒழுக்கம் சமுதாய கடைமைகள் ஆகியவற்றோடு 'அரச நீதி' பற்றியும் வள்ளுவப் பெருந்தகை அழகுற விளக்குகிறார்.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்?

 "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

 செல்வரும் சேர்வது நாடு"

என்று பசியும் பிணியும் இன்றி வளம் செழிக்கும் வகையில் நாடு இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் பெருந்தகையின் கணிப்பு.


அரச நீதி என்றால் என்ன?

     "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

      தேர்ந்துசெய் வஃதே முறை"

அதாவது குற்றம் இன்னதென்று நன்கு அறிந்து, யார் பக்கம் சாயாமல் நடுநிலை நின்று செய்யத்தக்கதை சரியாக செய்வதே அரசின் நீதியாகும் என்கிறார் வள்ளுவர்.

 

     அரசு நிதியை காப்பாற்றுவதற்காக அரசன் நற்பண்புகளையும், நற்செயல்களையும் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை 'இறைமாட்சி' அதிகாரத்தில் விளக்குகின்றார் பொய்யாமொழிப் புலவர்.


     மேலும் ஒரு நாட்டின் அரசு நிதி காப்பாற்ற படவில்லைஆனால் அந்நாட்டில் அறம்அறிந்து மறம் பெருகும். அது கூடாது என்பதே வள்ளுவரின் ஆணித்தரமான கருத்து. இக்கருத்தை முன்மொழிந்தவர் இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.


அரசனுக்கான அரசநீதி :

     

"படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு"


"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு"


*தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு"


     அதாவது படை, குடிமக்கள், உணவு பொருட்கள், நல்ல அமைச்சர்கள், சிறந்த நண்பர்கள், அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் ; அச்சமின்மை, ஈகை, அறிவு, ஊக்கம், காலம் தாழ்த்தாமல், கல்வி, துணிவுடைமை, முதலிய பண்பு நலன்களையும் உடையவன் தான் பெருமை பெற்ற அரசனாக இருக்க முடியும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

ஒரு அரசனுக்கு - அரசு நீதி நிர்வாகத்திற்கு மேற்குறிப்பிட்ட அனைத்தும் அடிப்படையானது என முதற்பாவலர் வலியுறுத்துகிறார்.



வெற்றிகரமான அரசு:

   அரசன், ஒரு வெற்றிகரமான அரசை நடத்த வேண்டும் எனில் அவன் காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் சொல்லாகவும், வேண்டுவோருக்கு வேண்டுவன கொடுத்து காப்பாற்றும் பங்கினை பெற்றவனாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய அரசனை மக்கள் புகழ்வார்கள் நாட்டிலேயே அரசநீதி தழைத்தோங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய அரசர்களே வரலாற்றில் வாழ்வார்கள். இதனை வள்ளுவர்,

 " காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

 மீக்கூறும் மன்னன் நிலம்"


" இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு"

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.


மேலும்,

     நீதி வழுவாத நெறிமுறையில் ஆளும் மன்னவன் மக்கட்கு இறை என்று போற்றப்படுவான் என வள்ளுவர் சொல்கிறார்

 " முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்".


     கொடை கொடுத்தல், கருணை, செங்கோல் புரிதல், தன் குடிகளைப் பாதுகாத்தல் ஆகிய குணங்களைக் கொண்ட அரசன் அரசர்களுக்கு எல்லாம் ஒளிதரும் விளக்குப் போன்றவன் ஆவான் என்பதை,

"கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

 உடையானாம் வேந்தர்க் ஒளி".



('மக்கள் நல அரசுக்கான' வள்ளுவரின் முன்னெச்சரிக்கைகள் ) : 


"நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தோறும் நாடு கெடும்"


"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

 மன்னவன் கோற்கீழ்ப் படின்"


"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

 ஒல்லாது வானம் பெயல்"


"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 

காவலன் காவான் எனின்"


    அதாவது நாள்தோறும் தன் ஆட்சியின் நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து முறை செய்யவில்லை ஆனால் அவன் நாட்டை இழக்க நேரிடும் என்றும்;

மழை செய்யாத அரசனுடைய ஆட்சியில் வாழ்வது மிக துன்பமானது என்றும்;

 அந்நாட்டின் பருவ மழை தவறும் என்றும்;

பசுக்கள் கூட பால்கரவமல் போகும் என்றும்;

 அந்தணர்கள் அற நூல்கள் அனைத்தையும் மறப்பர் என்றும் வள்ளுவர் அரசுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுகின்றார்.


முடிவுரை:

     மக்களை அரசன் காப்பாற்றுகிறான். அரசனை யார் காப்பாற்றுவது? நீதி வழுவாத நெறிமுறையின் அவன் ஆட்சி நடத்தினால் அதுவே அவனை காப்பாற்றும் என்ன உறுதியளிக்கிறார் மாதானுபங்கி. இதனை,

"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

 முறைகாக்கும் முட்டாச் செயின்"


எனவே தன்னுடைய ஆட்சியின் கீழ் வாழும் அனைத்து உயிரினங்களையும் காத்து,

 மக்களை அன்போடு அரவணைத்து, 

நீதி வழுவாது முறைப்படி செங்கோல் ஆட்சி செய்து,

குடிமக்களை பிறர் வருந்தாமல் காத்து,

தானும் வருந்தாமல் காப்பாற்றி, 

நடுநிலை தவறாது குற்றவாளிகளை தண்டித்து,

நாட்டின் வளம் பெருக்கி,

அதன் பயனை அனைவரும் அனைவரும் நுகரும் வகையில் செங்கோல் செலுத்தும் அவனே 'சிறந்த அரசனாவான்" என்பதை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.





Google search keywords:

Politics in Thirukkural,

Thirukkural justice, political justice in Thirukkural, Thirukural essay political, government Thirukural, judgement Thirukural essay, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, ESSAY WRITING, EVERYDAY LIFE IN THIRUKKURAL, SOCIAL RELEVANCE IN THIRUKKURAL, POLITICS IN THIRUKKURAL ESSAY, திருக்குறளில் அரசு நீதி, அரசும் திருக்குறளும், அரசியலும் திருக்குறளும், நீதியும் திருக்குறளும், அரசியல் நீதி, அரசு, அரசன், அரசின் நிதி குறித்து திருக்குறள், நீதி, மக்கள் தீர்ப்பு திருக்குறள், மக்கள் நல அரசு, திருக்குறள் கட்டுரைகள்


4 comments:

  1. மிகவும் அற்புதமாக உள்ளது

    ReplyDelete
  2. நிதி இல்லை நீதி... உங்களை நம்பி வந்தேன் பாரு

    ReplyDelete