THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Monday, July 5, 2021

வள்ளுவர் கூறும் போர்ப்படைகள் Armies Evinced By Thiruvalluvar




முன்னுரை:

      சங்க காலச் சூழலில் படை என்பது அரசின் அடிப்படையில் ஒரு அங்கமாக அமைகிறது. படைபலம் ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்தி காட்டக்கூடியது. அரசன் உரிமையை காத்துக் கொள்ளவும், நாட்டு மக்களை காக்கும் படைகள் பயன்படுவது பொதுவான ஒன்று. வேந்தர்களின் வீரத்தை வெளிப்படுத்த ஓர் முறையானது இருந்தது. இவ் வேந்தர்கள் படை வைத்து போர் செய்தனர். அப்படையின் வகைகளை வள்ளுவர் கூறும் கருத்துக்கள் மூலம் இக்கட்டுரை அமைகிறது.


படைகள்:

     பண்டைய காலத்தில் நாட்டினை பாதுகாக்க போரினை தொடுக்க படைகள் பயன்படுத்தப்பட்டது. 'மன்னர்கள் படையை வேந்தனின் திருமேனி' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வேந்தர்களுக்கு தங்களிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் விட படை செல்லவே முதன்மையானது என்பதை,

     "உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

      வெறுக்கையுள் எல்லாம் தலை"


என்ற குறட்பா மூலம் அறிந்து கொள்ளலாம்.


மன்னர்களுக்கு உரிய ஆறு கூறுகளில் ஒன்று படை:

         "படை குடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்

       உடையான் அரசருள் ஏறு"


வள்ளுவர் காலகட்டத்தில் மன்னர்களுக்கு உரிய ஆறு கூடுகளில் அடையும் ஒன்றாக இருந்துள்ளது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே வாழ்ந்து வந்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப் படைகளை வைத்திருந்தனர்.


படை வகைகள்:

      அன்றைய காலகட்டத்தில் தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என நான்கு படைகளும், எந்த மன்னன் கொண்டுள்ளானோ அந்த மன்னன் தான் மிகச்சிறந்த மன்னராக அங்கீகரிக்கப்பட்டதை,

     "உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

      வெறுக்கையுள் எல்லாம் தலை"

 
என்ற குறள் மூலம் மன்னர்களின் சிறப்பினை தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் படைத் தலைவர்களை 'தலை மக்கள்' என்றும், படைவீரர்களை 'நிலை மக்கள்' என்றும் கருதப்பட்டனர்.


களிற்று படை:

   நால்வகைப் படைகளில் மிக வலிமை மிக்கது யானைப்படை. போர்களத்தில் வீறு கொண்டு பகைவர்களை, மதில் சுவர்களை தகர்ப்பது யானைப் படையே. யானைப் படை வீரர்கள் குஞ்சரமல்லன், அத்தி மல்லர், ஆனைப்பாகர் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
திருக்குறளில் களிற்றுப்படை இருந்ததை,

     "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

      மெய்வேல் பறியா நகும்"


என்பதன் மூலம் படை இருந்துள்ளதை காணமுடிகிறது.

முயலை குறிதவறாமல் எய்த அம்பை கையில் பிடிபட்டதை, யானை மேல் எறிந்து தவறிய வேலை கையில் பிடித்தல் என்பது சிறந்தது என்று வள்ளுவர்,

      "உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

    தொல்ப்படைக் கல்லால் அரிது"

என இக் குறட்பா மூலம் கூறியுள்ளார். இதனால் யானையை ஈவதே வீரனுக்கு பெருமிதம் என்பது பெறப்பட்டது.

மேலும்,

     "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

      உண்டாகச் செய்வான் உண்டு"


என்று குறள் மூலம் யானை போரும் பண்டைக் காலத்தில் இருந்தது என உறுதி செய்யப்படுகிறது.


குதிரைப்படை:

   போரின் விரைவு கருதியும் ஆற்றல் கருதியும் குதிரைப்படை போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் குதிரைகள் சிந்து, பாரசீகம் ,அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 'தீ நட்பு' என்னும் அதிகாரத்தில் குதிரைப்படை இருந்தமையை,

     "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

      தமரின் தன்மை தலை"


என்ற குறட்பா மூலம் போரில் ஈடுபடும் போது குதிரை எனது வீரனை கீழே தள்ளிவிட்டு குதிரை எனது தப்பித்துக்கொள்ளும். குதிரையை போன்ற தீயவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மற்றவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவர் என கூறுகிறார்.



காலாட்படை:

     கால்களால் சென்று போரிடும் முறைக்கு காலாட்படை எனப்படும். இப்படை ஆற்றல்மிக்க ஆடவர்கள் பலரை கொண்டதாக காணப்படும் முன்வரிசை படையாகும். பகைவரின் தரை படையானது தன்னை தாக்க வரும் போது, அப்படையின்ஐ எதிர்த்து நின்று தடுப்பதாகும், இதனை வள்ளுவர்,

     "தார் தாங்கி செல்வது தானை தலைவந்த

    போர் தாங்கு தன்மையறிந்து"


என்ற குறட்பா மூலம் அறியமுடிகிறது.

('தார்' என்பதே காலாட்படையகளுள் ஒன்றான தூசிப்படை ஆகும்)



தேர்ப்படை:

     தேரானது மிக சிறியதாக, வீரனும் பாகனும் இருப்பதற்கு ஏற்ற அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வேருக்குள் இருந்துகொண்டு வீரர்கள் அம்பு அல்லது பிற ஆயுதங்களால் தாக்குவர், வெற்றி பெற்ற பின்பு வேந்தர்கள் வீரர்கள் அனைவரும் சேர்ந்து தேர்வுக்கு முன் குரவைக்கூத்து ஆடுவர் என தொல்காப்பியத்தில் 'தேரோர் களவழி'யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருக்குறளில் 'இடனறிதல்' என்னும் அதிகாரத்தில் தேர் பற்றிய குறிப்பு உள்ளது என்பதை,

     "கடலோடு கல்லா நெடுந்தேர் கடலோடும்

      நாவாயும் ஓடா நிலத்து"


இக் குறட்பா மூலம் நெடுந்தேர் என்னும் சொல் உள்ளதன் மூலம் தேர்ப்படை இருந்துள்ளதை தெரிந்துகொள்ள முடிகிறது. நால்வகை படையிலும் இருக்கும் படைவீரர்களின் நடத்திச்செல்லும் தலைவன் 'படைத்தலைவன்' என்று அழைக்கப்படுவர்.



முடிவுரை:

     ஒரு நாட்டினை பிற நாட்டினரும் இருந்து பாதுகாக்கும் பொருட்டு போர் ஏற்பட்டு, போர்ப்படையகள் உருவாக்கப்பட்டன. அப்படைகள் நிலப்படை, கடற்படை என சங்ககாலத்தில் பெயரிட்டு வழங்கியுள்ளது அறியமுடிகிறது. யானைப்படை குதிரைப்படை தேர்ப்படை காலாட்படை என நான்கு இருந்துள்ளது. பண்டைய கால வேந்தர்கள் நால்வகைப் படைகளும் போரில் பயன்படுத்துவதன் மூலம் அவர்களிடம் வீரம், பெருமிதம் வெளிப்பட்டதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.











GOOGLE SEARCH KEYWORDS:
Thirukkural essay about army, military THIRUKKURAL essay, politics thirukkural, government thirukkural essay, war thirukkural, everyday life thirukkural essay, armies envinced by Thiruvalluvar, Thiruvalluvar about military army, Thiruvalluvar about army,
வள்ளுவர் கூறும் போர்ப் படைகள், திருக்குறள் கட்டுரை அரசியல், திருக்குறள் கட்டுரை போர்ப் படைகள், திருக்குறள் சார்ந்த கட்டுரைகள், அரசன் திருக்குறள் கட்டுரை, அரசு திருக்குறள் கட்டுரை, அரசியல் திருக்குறள் கட்டுரை, அரசாங்கம் திருக்குறள் கட்டுரை, அமைச்சர் திருக்குறள் கட்டுரை, வெளியுறவு கொள்கை திருக்குறள், படைகள் திருக்குறள் கட்டுரை


No comments:

Post a Comment