முன்னுரை:
அறவழியில் ஈட்டிய பொருள்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கொடைத்திறனை உணர்த்திய வள்ளுவர் அரசின் நீதியையும், அரசாட்சி முறையையும் பற்றி பொருட்பாலில் கூறியுள்ளார். திருக்குறளில், மன்னர்களுக்கு என்று கூறிய கருத்துக்களில் மன்னர் என்ற சொல்லை நீக்கினால் அவை அனைத்தும் தற்போதைய மக்களாட்சி முறைக்கு பொருந்தக் கூடிய ஒன்றாகவே இருக்கும். வள்ளுவர் காலத்தில் நிலவிய அரசியல் சூழல் உலகம் முழுவதற்குமான கருத்தினை பிரதிபலிக்கும் விதத்தினை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
சூழல் - பொருள் விளக்கம்:
பண்டைத் தமிழர்கள் சூழலியல் பற்றிய அறிவை மிகுதியாக பெற்றிருந்தனர். அதாவது இவ்வுலகம் நிலம் நீர் காற்றினால் உருவாகிறது என்பதனை,
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
என்ற தொல்காப்பிய நூற்பா வால் அறியமுடிகின்றது. சூழல் என்பது இப்புவியில் உள்ள உயிர்களை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளை குறிப்பதாகும்.
அரசு:
அரசு என்ற சொல்லுக்கு மக்கள் சமுதாயத்தை நிர்வகிக்கவும் நெறிப்படுத்தவும் அமைக்கப்பட்ட அரசியல் ரீதியான அமைப்புமுறை என்று பொருள் கொள்ளலாம். மக்கள் நாடோடியாக வாழ்ந்த நிலையினை விடுத்து நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், பகைவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், அமைதியான முறையில் வாழ்வினை நடத்துவதற்கும், ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதற்கு ஒரு தலைவனை நியமித்து ஒரு நிலையான வாழ்வை நடத்துவதற்கு 'அரசு' துணை புரியும்.
அரசியல்:
அரசியல் 'POLITICS' என்பதற்கு ஆட்சி, அதிகாரம் எனப்பொருள்படும். அரசியல் என்பதனுள் அரசு, அரசாட்சி, அரசன் நாடு, நாட்டு மக்கள், அரசின் அதிகாரம், மக்களின் வாழ்க்கைத்தரம் என பல்வேறு கருத்துக்களின் உள்ளடக்கம் என்பதனை அறிய முடிகிறது.
அரசன்:
தற்பொழுது மத்திய அரசு, மாநில அரசு என்று இரண்டாகப் பிரிந்த ஆட்சி செய்வது போல், பண்டைய காலத்திலும் அரசர்கள் பேரரசன், சிற்றரசன் என இரு வேறு நிலையில் ஆட்சி புரிந்திருக்கின்றனர். மத்திய அரசு என்பது நாடு முழுவதும் ஆட்சி புரிவது, மாநில அரசு என்பது நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியை / ஒரு மாகாணத்தை அல்லது மாநிலத்தை மட்டும் ஆட்சி செய்வது. பெரும் பகுதியை ஆட்சி புரிபவன் பேரரசன், குறுநில மன்னன் சிற்றரசன் என அழைக்கப்பட்டனர். அரசன் என்பவன் மக்களை காக்கும் திறன் கொண்டவனாக இருக்கவேண்டும். அரசன் கல்வி, வீரம், கொடை, படைசிறப்பு, நிர்வாகத்திறன், மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆட்சி புரிய வேண்டும். மேலும் ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அரசன் கல்வி, துணிவு வீரம், கொடை ஒழுக்கம் ஆகிய இயல்புகளை பெற்றிருக்க வேண்டும்.
அரசருக்குரிய ஆறு பிரிவுகள்:
"படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"
வலிமை பொருந்திய படை, ஒழுக்கம் கொண்ட குடிமக்கள், உணவுப் பொருட்கள், மிகுந்த செல்வம், தகுதி வாய்ந்த அமைச்சர்கள், அயல்நாட்டு நட்புறவு, உறுதியான பாதுகாப்பு ஆகிய ஆறு பிரிவுகளை உடையவன் அரசருள் சிறந்தவனாக கருதப்படுவான் என வள்ளுவர் கூறுகிறார்.
நாடு:
மக்கள் கூட்டமாக இணைந்து வாழும் ஒரு நிலப்பகுதியை நாடு எனலாம். குறைவில்லாத விளைபொருள்களை விலைவிப்போரும், அறவழியில் ஒழுகுவோரும், குறைவில்லாத செல்வத்தை உடையவரும் சேர்ந்து வாழும் இடமே நாடு என்பதாக வள்ளுவர் கூறுகிறார்.
அரசனது தொழில்:
அரசனது தொழில் என்பது மக்களை துன்பப்படாமல் காத்தல் ஆகும். காக்கும் தொழிலை செய்பவன் மன்னனாவான். மக்களது குற்றங்களை நீக்கி தண்டனையின் மூலம் நீக்குதல் என்பது அரசனுக்கு பழியல்ல, அது அவனுடைய தொழிலாகும், இதனை,
"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்"
என்னும் குரல் உணர்த்தி நிற்கிறது.
அரசருள் சிறந்தவர்:
நீதி நெறியில் இருந்து வழுவாமல் அறவழியில் ஆட்சிபுரிந்து தன் மக்களையும் வருந்தாமல் காக்கின்ற அரசன் மனித குலத்தில் பிறந்தாலும் தெய்வத்தன்மை உடையவனாக கருதப்படுவான் என்று வள்ளுவர் குறட்பாவின் மூலம் உணர்த்துகின்றார்.
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்"
என்ற குறட்பா மூலம் மன்னர்களின் சிறந்தவன் ஆட்சி புரியும் தன்மையை அடையாளப்படுத்திகின்றார்.
கொடுங்கோல் ஆட்சி:
கொடுங்கோல் ஆட்சி என்பது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சி புரிவதை குறிப்பதாகும்.
"வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு"
என்னும் குறட்பாவில் அரசனை வழிப்பறி செய்வோர் உடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார் வள்ளுவர். அதாவது செங்கோலை கையில் ஏந்தி மக்களிடம் அதிக பொருளை வரியாக வாங்கும் அரசன், வழிப்பறி செய்யும் கணவர்களுக்கு ஒப்பானவன் என்று கருத்தை வலியுறுத்தும் விதமாக அமைகின்றது.
ஒற்றன்:
ஒற்றன் என்பவன் ஒற்று ஆய்ந்து தன் நாட்டிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே அரசனுக்கு உரைப்பவன் ஆவான். ஒற்றன் என்பவன் யாரும் அறியாதவாறு மக்களோடு மக்களாகவும், துறவி போல் வேடம் புனைந்து இருக்க வேண்டும். அவ்வாறு மக்களோடு ஒன்று இருந்தால் மட்டுமே செய்திகளை தெளிவாக அறிய முடியும், என்பதனை,
"துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலா தொற்று"
என்ற குறட்பா துறவிபோல் தவக்கோலம் பூண்டு புகழ்பெற்ற பெரிய இடங்களில் எல்லாம் புகுந்து ஆராய்ந்து கூறவேண்டும். தன்மேல் சந்தேகம் கொண்டு தன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும், மனம் தளராது இருப்பவனே சிறந்த ஒற்றன் என்பது இக்குறள் கூறும் கருத்து ஆகும்.
தூது:
தூது என்பது ஒரு செய்தியை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவது ஆகும். இதனை இரண்டாக வகைப்படுத்தலாம், அவை அகத்தூது, புறத்தூது ஆகும்.
அகத்தூது என்பது தலைவன் தலைவி இருவரிடையே நிகழ்வது. புறத்தூது அரசுகளுக்கிடையே நிகழ்வதாகும்.
"விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க் ணவன்"
வாய் தவறியும் இழிவான சொற்களை சொல்லாத உறுதி உடையவனே, தன் அரசன் கூறிய செய்தியை சிறிதும் மாற்றாமல் கூறுவான் என்ற கருத்தினை வெளிப்படுத்தும் விதமாக குறட்பா அமைந்துள்ளது.
வெளிநாட்டு உதவி:
வள்ளுவர் வெளிநாட்டு உதவி பெறுதலை ஆதரிக்கவில்லை. வெளிநாட்டு உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல என்கிறார், இதனை வள்ளுவர்,
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு"
அதாவது தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
போர்:
போர் என்பது இரு நாட்டு அரசர்கள் இடையே மண்ணாசை காரணமாகும், பொன்னாசை காரணமாகவும் நடைபெறும் சண்டைஇணை கூறலாம்.
"தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் இது"
அதாவது பகைவர்களை வளைத்துப் போர் புரிவதற்கு ஏற்ற இடம் காண்பதற்கு முன் அவர்கள் மேல் எவ்வித மோதலையும் தொடங்குதல் கூடாது. பகைவரை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிடக்கூடாது. வெற்றிக்கு இடம் தேர்ந்தெடுத்தல் இன்றியமையாதது என்ற கருத்தினை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
நடுகல் வணக்கம்:
போரில் இறந்த வீர மறவர்களின் நினைவாக கல்லினை நட்டி வழிபடும் முறையே நடுகல் வணக்கம் எனப்படும்.
"உன் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்"
என்ற குறட்பாவில் போர் வந்தபோது உயிர் விட அஞ்சாமல் துணிவுடன் போர் செய்யும் வீரர், அரசரே சினம் கொண்டாலும் தம்முடைய சிறப்பை கொண்டவர் என்று வீரமறவர்களை வள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்"
என்ற குறட்பா, பகை மன்னரிடம் தூது செல்லும் புலவர்கள் தன் மன்னனின் சிறப்பைக் கூறும் பொழுது அவன் செய்த போரையும் கூறுவர். அவ்வாறு கூறும் பொழுது பகைவர்கள் என் தலைவனை எதிர்த்து முன்னே நிற்காதீர்கள், என் தலைவனை எதிர்த்து நின்று மடிந்து நடுகல்லாய் நின்றவர் பலர் என்ற செய்தியும் வள்ளுவத்தில் இடம்பெற்றுள்ளது.
முடிவுரை:
தன் நாட்டிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே அறிவதற்கு ஒற்றர்கள் முறை என்ற ஒன்று அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாட்டிலும் நிலவி வரும் ஒரு அரசியல் சூழல் என்பதை வள்ளுவர் வழி அறியமுடிகிறது.
தற்போதைய அரசியல் முறை(மத்திய+மாநில) போன்று, பண்டைய காலத்திலும் பேரரசன், சிற்றரசன் என பிரிந்து ஆட்சி புரிந்ததையும் அறியலாம்.
பண்டைய தமிழர்கள் அறச்செயலிற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுத்தனர்ரோ, அதே அளவிற்கு வீரத்திற்கும் முன்னுரிமை கொடுத்துள்ளனர் என்பதனை மேற்கண்ட குறட்பா மூலம் உணர முடிகிறது. வீரம் இல்லாதவனை கோழையாக கருதும் வழக்கம் அன்று முதல் இன்று வரை தமிழ் சமூகத்தில் நிலைபெற்றுள்ள கருத்தாகும்.
இக்கட்டுரையின் மூலம் வள்ளுவர் கால அரசியல் நிலையை அறிந்து கொள்ள முடிந்தது.
GOOGLE SEARCH KEYWORDS:
திருக்குறள் உணர்த்தும் அரசியல் சூழல், அரசியல் திருக்குறள் கட்டுரை, அரசு திருக்குறள் கட்டுரை, அரசாங்கம் திருக்குறள் கட்டுரை, அதிகாரிகள் குறித்து திருக்குறள், அரசர் குறித்து திருக்குறள், அரசாட்சி குறித்த திருக்குறள் கட்டுரை, அரசன் திருக்குறள் கட்டுரை, திருக்குறள் கட்டுரை அரசு முறை, ஆட்சிமுறை திருக்குறள் கட்டுரை, அரசியல் குறித்து திருக்குறள் கட்டுரை, தூதுவர் ஒற்றர் குறித்து திருக்குறள், அன்றாட வாழ்வில் திருக்குறள், மானுட தாக்கம் திருக்குறள், TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, THIRUKKURAL ESSAY ENGLISH , THIRUKKURAL ESSAY TAMIL , PDF DOWNLOAD, THIRUKKURAL ESSAY POLITICS, POLITICAL ATMOSPHERE IN THIRUKKURAL, THIRUKKURAL ABOUT POLITICS, GOVERNMENT THIRUKURAL ESSAY, TNPSC THIRUKKURAL ESSAY, POLITICS IN THIRUKURAL, EVERYDAY LIFE IN THIRUKKURAL, HUMAN LIFE ETHICS , MORAL ETHICS IN THIRUKKURAL, SOCIAL RELEVANCE IN THIRUKKURAL, THIRUKKURAL TAMIL SOCIETY, SOCIETY THIRUKURAL ESSAY
Semma bro
ReplyDelete