முன்னுரை:
தான் தோன்றிய காலம் முதல் இக்காலம் வரை மற்றும் உலகம் உள்ளவரையானை மனித சமுதாயத்தின் பிரதிபலிப்பை திருக்குறள் கொண்டிருப்பது வியப்புக்குரியது. உலக சமுதாயத்தின் மீது பேரன்பு கொண்ட வள்ளுவர், அவற்றிற்கான செயல்வகைமைகளை பட்டியலிட்டுள்ளார். அவ்வகையில் தெரிந்துசெயல்வகை, வினைசெயல்வகை, பொருள்செயல்வகை, குடிசெயல்வகை என நான்கு அதிகாரங்கள் படைத்துள்ளார். அச்செயல்களின்ன பரிணாமங்களும், அச்செயலால் விளையும் தனிமனித சமூக விழுமியங்களையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
செயல்வகைமைகள்:
ஒரு தனிமனிதன் செயலே அவனது வாழ்வையும், அவனைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் தீர்மானிக்கும். இதனை பிரதிபலிக்கும் விதமாக அரசர், அமைச்சர், வணிகர் சாதாரண குடிமக்கள் என நான்கு வகையான செயல் வகைகளை வரையறுத்துள்ளார் வள்ளுவர்.
அரசருக்கு - தெரிந்து செயல்வகை
அமைச்சருக்கு - வினைசெயல்வகை
வணிகருக்கு - பொருள்செயல்வகை
குடிமக்களுக்கு - குடி செயல்வகை
செயலின் தன்மைகள்:
ஒரு அறிவார்ந்த சமுதாயம், சமூகமாக நிலைபெறுவதற்கு சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. ஏனென்றால் சிந்தனை தோன்றினால் தான் அதற்கான சொல்லும் செயலும் வெளிப்படும். சிந்தனையே செயலாக வடிவம் பெறுகிறது. எனவே அறிவும் வலிமையும் காலமும் கொண்டவராலேயே சிறந்த நற்செயல்களை செய்ய முடியும் என்பதை,
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
என்ற குறட்பா குறிப்பிடுகிறது.
மேலும் ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன், செய்ய வேண்டிய செயலை கவனமாக செய்து முடிப்பதும்; செயலை செய்யத் தொடங்கியபின் வருந்துவதும் கூடாது என்பதை,
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
எனவே, இவை காலம் தாழ்த்தி செய்ய வேண்டும் எதை விரைந்து செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து செய்ய வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
[காலம், கருவி, செயல், இடம், பொருள் ஆகிய ஐந்தும் அடிப்படையாகக்கொண்டு செயல்திட்டம் அமைதல் வேண்டும். எனவே இவை அனைத்தையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்.]
அரசனின் செயல்திறன்:
இறைவனுக்கு இணையாக விளங்கும் அரசன் தன் நாட்டு குடிமக்களுக்கு கடமை பட்டவனாக இருந்தால், அவனுக்கு வீரமும் அறிவும் ஒருங்கே வந்து சேரும். அறிவில்லாத செயல்புரியும் மன்னனை இகழப்பட்டதை,
"அரிவை போகிய போரியல் மன்றத்து
இறைமுறை பிழைத்தது வாயிலோயே"
என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
மேலும்,
அரசன் எக்காலத்திற்கும் பயன்பெறும் செயலை செய்ய வேண்டுமானால், தகுதி வாய்ந்த அமைச்சர்களோடும் தம்முடைய அறிவாழும் செய்து முடித்தல் வேண்டும்.
இதனை,
"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்"
என்ற குறட்பா மூலம் புலப்படுகிறது.
அமைச்சரின் செயல்வகைமை:
ஒரு நாட்டின் நிர்வாகத்தினை செயல்படுத்தும் வல்லமையை பெற்றிருப்பது அமைச்சருக்கு உரியது. எனவே அமைச்சன் ஒருவன் அரசனுக்கும் நாட்டிற்கும் இன்றியமையாததாக இருக்கிறான். எச்செயலையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் வல்லமை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்பதனை,
"சூழ்ச்சிமுடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது"
எங்க குறட்பா மூலம் அறிய முடிகிறது.
தன் நாட்டின் படை வலிமையும் எதிரி நாட்டின் மீது படை வலிமையும் உணர்ந்தவனாக விளங்கும் அமைச்சன், எக்காலத்திலும் எச்சூழலிலும் எவ்வகையான செயல் செய்தால் நன்மை பயக்கும் என்பதை அறிந்து செய்பவனாக இருத்தல் வேண்டும். வலிமையோடு இருக்கும் போது போராலும், வலிமை இல்லாத இருக்கும்போது அறிவுத் திறனாலும் அமைச்சர் விளங்க வேண்டும் என்பதனை,
"உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெரின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து"
என்ற குறட்பா வலியுறுத்துகிறது.
பொருள் சேர்க்கும் முறைகளும் வகைமைகளும்:
அறத்தோடு வராது பொருட்களை தவிர்ப்பதும், அறத்தோடு பொருள் சேர்ப்பதே பயன்தரும் என்பதை,
"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்"
என்ற குறட்பாவின் மூலம் அன்பையும் அருளையும் தரவல்லது பொருள் ஒன்றே, ஆதலால் ஒரு பொருளை வணிகர்கள் அறத்தோடு ஈட்டினால் இன்பம் தன்னைத் தேடி வரும் என்பதை கூறுகிறார் வள்ளுவர்.
மேலும்,
அரசு நிர்வாகம் நேர்மையாக இருக்கவேண்டுமானால், வணிகரின் துலாக்கோல் நேர்மையாக இருத்தல் அவசியம் என்பதனை,
"ஓம் பொருள் கால்டு இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு"
என்ற குறட்பா வெளிபடுத்துகின்றன.
குடிமக்களும் செயல் திறமைகளும்:
"ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள் வினையால் நீளும் குடி"
என்ற குறட்பாவின் மூலம் விடா முயற்சியினாலும் நல்ல அறிவினாலும் செயலாற்றுபவரரின் குடி உயரும்; அவ்வாறு ஒவ்வொரு குடியும் சிறப்பாக அமைந்தால் தான், அந்த நாடும் சிறந்து விளங்கும்.
"நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்"
என்ற குறட்பா மூலம் செயல் குற்றம் இல்லாமல் தன் குடியை உயர்த்த நினைப்பவன் 'நல்லாண்மை' மிக்கவன் என்றும், குடியை உயர்த்தி முயல்பவன் அரசனாலும் சமுதாயத்தினராலும் போற்றப்படுவான் என்கிறார் வள்ளுவர்.
தெளிவில்லாத செயல்களின் விளைவு:
"வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு"
தெளிவில்லாத செயலை செய்ய, அறிவுடையோர் அஞ்சுவர். அவ்வாறு ஆராயாமல் ஒரு செயலை செய்வதால் பகைவருக்கே வெற்றி உண்டாகும் என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும்.
அறிவார்ந்த செயல்கள்:
"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று"
ஒரு செயலைச் செய்யும்போது அதனை சார்ந்த மற்றொரு செயலையும் செய்து முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அனுபவசாலிகளின் கருத்தையும் கேட்டறிந்த செய்தல் வேண்டும். அதுவே காலம், இடம், வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செய்யும் அறிவார்ந்த செயல்.
முடிவுரை:
ஒரு வெற்றிகரமான செயலுக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று அனுபவமே. அனுபவம் நாம் செய்த செயலில் இருந்து கிடைக்கின்றன, அறிவு வெற்றி பெற்ற செயலிலிருந்து கிடைக்கின்றன. எனவே ஒருவனின் செயலை முன்னிறுத்தி அவனின் அழிவை மதிப்பிடப்படுகிறது. எனவே சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தன் கடமை மாறாது, செய்யும் செயலை அருண் உடையதாகவும் அறிவு உடையதாகும் பிறர் போற்றும் படி சிறப்பான வகையில் செய்தல் வேண்டும்.
மன்னராட்சி காலத்தில் வந்த திருக்குறள் நாடாளும் மன்னனுக்கும், நாட்டை நிர்வகிக்கும் அமைச்சருக்கும், பொருட் செல்வத்தை சேமிக்கும் வணிகருக்கும், குடியை உயர்த்தும் குடிமக்களுக்கும் செயல்வகைமைகளை வகுத்துள்ளார் என்பதனை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது.
GOOGLE SEARCH KEYWORDS:
செயல்வகை திருக்குறள், வள்ளுவர் உணர்த்தும் செயல்வகைமைகள், அரசனின் செயல் திருக்குறள் கட்டுரை, அமைச்சரின் செயல் திருக்குறள் கட்டுரை, குடிமக்கள் செயல் திருக்குறள் கட்டுரை, அரசாங்கம் திருக்குறள் கட்டுரை, ஆட்சி திருக்குறள் கட்டுரை, ஆட்சிமுறை திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வியல் திருக்குறள் கட்டுரை, வள்ளுவர் உணர்த்தும் செயல் வகைமைகள், அரசு அரசாங்கம் திருக்குறள் கட்டுரை,
Types of actions thirukkural essay, government duties thirukkural essay, ministers thirukkural essay, citizen thirukkural essay, traders thirukkural essay, state thirukkural essay, Thiruvalluvar about king, Thiruvalluvar about democracy, thirukkural about King behaviour, everyday life thirukkural, impact of human life, thirukkural essay humanism, social relevance thirukkural essay
nice blog thank you from Hindi Sahayak
ReplyDelete