முன்னுரை:
உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் உயர்ந்த கனவுகளுடன், சிறந்த சிந்தனைகளுடன் தனது வாழ்க்கை திறம்பட வாழ்வர். அக்கனவுகள் கூடிய எதிர்கால சிந்தனைகளின் வெற்றி, தனது வாழ்வின் வெற்றியாக கருதுவர். அவ்வாறு தனது வாழ்க்கையில் வெற்றி பெற சிறந்த திட்டமிடதல், காலமறிதல், இடனறிதல், வலியறிதல், தகுந்த இலக்கை தேர்ந்தெடுத்தல், செயலின் செயல்பாடு முதலியவை வாழ்வின் வெற்றிக்கு இன்றியமையாதது. வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும், வள்ளுவத்தின் குறட்பாக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வாழ்வின் வெற்றி:
தன்னம்பிக்கை, முறையான பயிற்சி, விடாமுயற்சி, பணியில் ஒழுக்கம் ஆகியவை ஒரு செயலின் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால் நம் வாழ்வில் வெற்றி பெற சுற்றியுள்ள சமுதாயத்தின் நல்ல மதிப்பை பெறுவது, சான்றோரால் பாராட்டப்படுவது, முறைசார்ந்த அறம் வழியில் செயல்படுவது, பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணி உதவும் பண்புடையது, பிறர் புகழுமாறு அறியப்படுவது வாழ்வின் வெற்றிக்காக கருதப்படும் என வள்ளுவர் கூறுகிறார்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்:
வாழ்கையில் வெற்றி பெற மானுடன் முதலில் உயர்ந்த கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் உடையவனாக இருத்தல் வேண்டும். நீர்நிலைகளில் நீரின் அளவுக்கேற்ப மலரின் அளவு உயரும், அதுபோல் நாம் காணும் கனவின் அளவுக்கேற்ப வாழ்வில் வெற்றி உயரும். இதனை வள்ளுவர்,
"வெள்ளத்து அனைய நீர்மட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு"
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை தீர்த்து"
மேற்கண்ட குறட்பாவில் ஒருவன் காணும் கனவின் லட்சியம் அடைய, உயர்ந்த எண்ணங்கள் உடையவனாக இருத்தல் அவசியம். அவ்வாறு நம்முடைய விடாமுயற்சிகள் பயன் அளிக்கும் என்பதால் நான் எண்ணியதே உயர்வாக எண்ணுதல் அவசியம், மேலும் அச்செயல் நடக்காவிட்டாலும், நம் மேற்கொண்ட முயற்சி வெற்றியின் நடந்ததைப் போல் மன அமைதியைத் தரும் என கூறுகிறார் வள்ளுவர். எனவே இலட்சியத்தை உயர்வாக, இடைவிடாமல் எண்ணிப் பார்ப்பது வாழ்வின் வெற்றிக்கு முதல் படி.
குறிக்கோள் உடைய இலக்கு தேர்ந்தெடுத்தல்:
ஒரு இலட்சியத்தின் இலக்கு, யாது என்பது என நன்கு ஆராய்ந்து, முறைப்படி அடைய வழிவகை செய்தல் அவசியம். அதுபோல் ஒரு செயலைத் தொடங்கும் முன் நன்கு ஆராய்ந்து எண்ணுதல் வேண்டும், செயல் தொடங்கியபின் ஆராய்வது துன்பத்தைத் தரும் என்கிறார் வள்ளுவர். இதனை,
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
மேலும்,
லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டிய இலக்கை முயலாததாலும், முறையற்ற இலக்கை முயல்வதாகவும் துன்பம் நிலவும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனை
"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"
"தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்"
எனவே வாழ்வின் லட்சியத்தின் இலக்கை அடைய, இலக்கை அடைந்து வெற்றி பெற்ற நபர்கள் உடன் கூடி கலந்தாலோசித்து செயல்படுவது அறிவுடையவரின் செயல் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
வெற்றிக்கான திட்டமிடுதல்:
லட்சியத்தை மேற்கொள்ள வேண்டிய பொருட்கள், தகுந்த காலம், முறையான கருவி, சரியான செயல் வகைமை, உரிய இடம் ஆகிய ஐந்தும் நன்கு ஆராய்ந்து திட்டமிட்ட பின் ஒருவன் செயலைத் தொடங்குவது, வெற்றியைத் தரும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனை,
"பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்"
என குறட்பா மூலம் வெற்றியின் ஐந்து கூறுகளை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
1. பொருளும் கருவியும்:
திட்டமிடுதலின் முதல் படி பொருளையும் கருவியும் திரட்டுவதே.
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு..." என்றும்,
"செய்கை பொருளை.."
என்னும் குறட்பா மூலம் பொருளின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
2. திறனறிதல்:
ஒரு செயலை மேற்கொள்ளும் போது, நமது திறனை வலிமையை நன்கு ஆராய்ந்து செயல்படுதல் வேண்டும். எனவே அனைத்தையும் ஆராய்ந்து பின்னர் ஒரு செயலை செயல்படத் தொடங்குதல் வேண்டும். இதனை வள்ளுவர்,
"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்"
என குறட்பா மூலம் குறிப்பிடுகிறார்.
3. காலமறிதல்:
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"
"காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்"
எனும் குறட்பா மூலம் கால மனிதனின் அவசியத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
4. இடம் அறிதல்:
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்"
என்னும் குறட்பா மூலம் உலகத்தை வெல்ல கருதுபவர், அதற்கான இடத்தை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பின் செயல்படுவர் எனக் குறிப்பிடுகிறார்.
இலட்சியத்தின் செயல்முறை:
"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை"
என்னும் குறட்பாவில் தகுந்த நேரத்தில் செய்ய வேண்டியது செயலை காலத்தாமதத்தோடு செய்தால், காலத்தாமதத்தோடு செய்யக்கூடிய செயலை விரைவாக செய்தல் கூடாது என எச்சரிக்கிறார் வள்ளுவர். இவ்வாறு செய்வதால் 'முயலாமை' என்னும் முறைசாரா எண்ணம் உருவாகும் என கூறுகிறார்.
மேலும்,
"முயற்சி திருவினையாக்கும்..."
"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"
மேற்கண்ட குறட்பா மூலம் நாம் கண்ட கனவை நினைவாக்கும் அதற்கு திட்டமிடுதல் கூடிய விடாமுயற்சியுடன் செயல் திட்டம் அவசியம். எனவே செயலை மேற்கொள்ளும் போது எண்ணித் துணிந்த பின் திட்டமிட்டு செயல்படுவது கடுமையான இலக்கையும் எளிமையாக்கும் என்கிறார் வள்ளுவர்.
வெற்றியின் முழுமை:
உயர்ந்த சிந்தனை கொண்ட கனவுகளும், பொருள் கருவி இடம் காலம் திறன் முதலிய திட்டங்களும், முறையான செயல்வகைகளும் வாழ்வின் லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அவ்வாறு வெற்றி பெற்ற லட்சியத்தை தமக்கு உரிய காலத்தில் உதவிய தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் பகிர்ந்தளிக்கும் போது அவ் 'வெற்றி முழுமைபெறும்' என்கிறார் வள்ளுவர். அவ் வாழ்வின் வெற்றியே, சமுதாயத்தில் தம்மை மதிப்பு உடையதாகும், பாராட்டு உடையதாகும் போற்றப்படும்.
"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"
மேலும்,
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
எனும் குணம் உடையவர்கள், வாழ்வில் புகழுடன் வாழ்வர்.
முடிவுரை:
வாழ்வில் வெற்றி அடைய விரும்புபவர் உயர்வாக எண்ணுதல், குறிக்கோள் உடைய இலக்கை தேர்ந்தெடுத்தல், அதற்கான செயலை மேற்கொள்ளுதல், பெரியோரின் துணைக்கோடல், திட்டமிடுதல் கூடிய விடா முயற்சிகள், இடையூறுகளுக்கு மனம் தளராமல் உழைத்தல்
முதலியவை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் என சொத்தா போதகர், உத்தரவேதத்தின் வழி வழிகாட்டுகிறார்.
" குறளே! குறளே!! குறளே!!!
குறளை கல்லாதவர் வாழ்வு
இருளே! இருளே!! இருளே!!! "
GOOGLE SEARCH KEYWORDS:
வாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் கட்டுரை, திருக்குறள் வழிகாட்டல், திருக்குறள் வாழ்வின் வெற்றி, வெற்றி பற்றி திருக்குறள் கட்டுரை, வெற்றிகரமான வாழ்க்கை திருக்குறள் கட்டுரை, இடனறிதல் திருக்குறள் கட்டுரை, காலமறிதல் திருக்குறள் கட்டுரை, பொருள்கருவி திருக்குறள் கட்டுரை, வலி அறிதல் திருக்குறள், திட்டமிடுதல் திருக்குறள் கட்டுரை, இலக்குகளை தேர்ந்தெடுத்தல் திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் கட்டுரை, மானுட தாக்கம் திருக்குறள் கட்டுரை, சமூகம் சமுதாயம் திருக்குறள் கட்டுரை, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, successful life thirukkural, Thiruvalluvar guideline, greatness of thirukkural, greatness of thirukkural essay, successful life story thirukural essay, everyday life in thirukkural, impact of human life in thirukkural, moral ethics in thirukkural, life ethics in thirukkural, humanity social relevance in thirukkural
Motivational of the decade 💙💯
ReplyDeleteWgwjvdhkh
ReplyDelete