முன்னுரை:
உலக உயிரினங்கள் எல்லாம் உணவினை முதன்மையாக பொருளாகக் கொண்டு உயிரினை உயிர்ப்பித்துக் கொள்வதற்கு ஆதாரமாக இருக்கின்றன. மற்ற விலங்கினங்களில் இருந்து சிறிது மாற்றம் கொண்டு சிந்தித்து மனிதனும் தன்னுடைய உணவினை தானே உற்பத்தி செய்து கொள்ள இயற்கையிடம் பாதுகாத்துக் கொண்டு சிறு சிறு வேளாண்மை உருவானது. மண்ணைக் கிளர்ந்து செடி கொடிகளை வளர்த்து உணவினை உற்பத்தியை பெருக்கி கொண்டான். பழங்காலம் தொட்டு பல்வேறான தொழில்கள் முதன்மை பெற்று வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையான தொழிலாக ஏற்றம் பெற்றது.
உலகமும் உணவும்:
உலகிலுள்ள மனித இனங்கள் மூலம் மற்ற உயிரினங்கள் வரை உயிர் வாழ்வதற்கு உணவு என்பதே அடிப்படை. இவை இல்லாமல் வாழ்வது அரிது. அதனால்தான் வள்ளுவர் உலகங்கள் பல தொழில்களை முதன்மையாகக் கொண்டு சிறப்புற்று விளங்கினாலும் தனக்குப் பசி என்று வந்து விட்டால் உணவிற்காக அலையும் நிலை ஏற்படும். இதனை,
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
என்று திருவள்ளுவரும் உலகம் ஏரின் பின்பு தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்கும், உழவுத்தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்ற அவருக்கு உழவுத் தொழிலால் உண்டாகின்ற உணவே அவர்கள் உயிர் வாழ்வதற்காக முதன்மையாக இருப்பதினால் உலகம் இயங்குவதற்கு அச்சாணியாக விளங்குவதை,
"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"
என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
உழுவாரைத்தொழுதல்:
வான்மழை உலகில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ்வதற்கு வழிவகை செய்கின்றதோ, அதேபோன்றே வேரினை கொண்டு உழவு தொழிலை செய்து வாழ்கின்ற உழவர்கள் தான் மட்டும் உண்டு வாழாமல், பிற உயிர்களையும் உயிர் வாழ வைக்கின்றனர்.
இதனால்தான் திருவள்ளுவர்,
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
என்ற அடிகளில் உழவுத் தொழிலைச் செய்யக் கூடிய உழவர்கள் குறிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்வர், மற்ற தொழிலைச் செய்யக் கூடியவர்கள் அவர்கள் தரக்கூடிய உணவினை உண்டு பின் தொடர்ந்து சென்றார் என்று குறிப்பிடுகின்றார்.
அரசரும் உழுவரும்:
நாட்டை ஆளக்கூடிய அரசர்களும் நாட்டின் தன்மைகளை சிறந்து விளங்க வேளாண்மை சிறந்து விளங்க வேண்டும். ஆதலால் உழவர்கள் தன்னுடைய தொழிலை சிறப்பாக நடத்தினால் தான் அரசின் நேர்மையான ஆட்சியை தர முடியும். அதனால்தான் வள்ளுவர்,
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்"
என்ற அடிகள் மூலம் பல மன்னர்களால் ஆளப்பட்ட குடிமக்கள் ஆனாலும் அவர்கள் எல்லோரும் உழவர்களின் உறவு பயனைக் கொண்டு உயிர் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு உழவுத் தொழிலில் சிறப்பாக நடைபெற்றால் தான் ஒரு அரசனின் குடை சிறப்புற விளங்கும்.
உழவரும் இரப்பாரும்:
நெல்மணிகள் குவிந்து கிடக்கும் இடத்திற்கு வரக்கூடிய இரவலர்களுக்கு ஒருபோதும் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கும் செம்மை பண்புடையவர்கள் உழவர்கள். பல விதமான தொழில்களை புரியக் கூடியவர்கள் இரவலர்களாக இருப்பர். இதனை,
"இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்"
உழுவர்கள் தம் கைகளினாலேயே உழவுத் தொழிலை செய்து உணவுப் பொருட்களை விளைவித்து உண்ணும் இயல்பினை கொண்டவர்கள். தனக்காக ஒரு போதும் யாரிடமும் சென்று இரக்கமாட்டார்கள். தம்மிடம் இரந்து வருபவர்களிடம் எதையும் ஒழிப்பும் பண்பு இல்லாதவர்கள் வேண்டிய அளவு இரவலர்களுக்கு கொடுத்து அனுப்புவர்.
உழவும் துறவும்:
உலகத்தில் உழவுத் தொழில் என்பது இடைவிடாது நடைபெற்றால் தான் நாடு நலம் பெரும். அவ்வாறு அத்தொழில் நடைபெறவில்லை என்றால் உண்மை தன்மை இழந்து பொய்யும் வழுவும் தோன்றும், ஆதலால் உழவர்கள் உழவுத்தொழிலை இடைவிடாது செய்வர். இதனை,
"உறவினர்கள் மட்டுமில்லை விளைவாகும்
விட்டோம் என்பார்க்கும் நிலை"
உழவர்களுக்குஉழவுத் தொழிலை ஏற்றுக் கொண்டாலும் செய்ய முடியாத நிலை ஏற்படுமானால் விருப்பம் கொள்கின்ற எல்லாவற்றையும் துறந்து விட்டோம் என்று கூறிவிடும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லாமல் போய்விடும் என்று திருவள்ளுவர் உழவுத் தொழிலை உயர்ந்த தொழிலாக இருப்பதாக அறிவுறுத்துகிறார்.
நிலத்தை பயன்படுத்துதல்:
பல்வேறு நிலைகளில் இருந்து நிலத்தினை செம்மைப்படுத்த அதனை திரு பண்பட்ட நிலமாக ஆக்கி பின்பே வேளாண்மை நிலமான மாற்றி பயிரினை இடுவர்.
"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்"
என்றற அடிகளில் உழவன் தன் நிலத்தினை ஒரு பலப்புழுதியைக் கால்பலமாக ஆகுமாறு பலமுறை பொழுது அதனை காயவிடுவோமேயானால் நிலத்தின் ஒரு பிடி அளவு கூட வேறு போடவேண்டிய இன்று கிடைக்கக்கூடிய விதையானது பயிர்கள் செழித்து வளரும் தன்மை உடையதாக இருக்கும் என்பதை விளக்குவதாக உள்ளது.
எரு இடுதலும் காத்தலும்:
உழவு செய்து நிலத்தின் வளத்தை உருவாக்குவதில்லை விட ஆடு மாடுகளின் இடை வைப்பது மேல். அதனுடைய இருக்கலாம் பயிரின் தன்மையும், நோய் இன்மையும், பயிர்களின் மேல் மணிகளின் திராட்சியின் தன்மையும், உபரி களும் அதிகமாகவும் கிடைக்கும். அதேபோன்று பயிரின் ஊடே இருக்கின்ற கலை நீக்கி, நீர் பாய்ச்சி விளைவிப்பதை உள்ளவர்களிடம் காணப்படுகின்றது நிகழ்வு காலம் காலமாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நிகழ்வாக இருக்கின்றது.
முடிவுரை:
உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து விரல்கள் முழுவதும் உழவுத் தொழிலின் தன்மையை வெளிப்படுத்துகிறது. உலகத்தில் எத்தனை தொழில் முறைகள் மனிதன் உருவாக்கிய நானும் கூட உழவு தொழிலுக்கு ஏற்ற தொழில் இல்லை என்று சொல்லலாம்.
"ஏர்முனை இங்கு நிகரேது"
என்ற பழமொழிக்கு ஏற்ப உழவர்களின் வாழ்வில் சிறந்து விளங்கினால் தான் மன்னன் ஆட்சி மகத்துவம் பெறும், இல்லை என்றால் மடிந்து போகும்.
GOOGLE SEARCH KEYWORDS:
AGRICULTURE ESSAY, AGRICULTURE IN THIRUKKURAL, THIRUKKURAL ABOUT AGRICULTURE, AGRICULTURE LOFTY SOCIETY, FARMER ESSAY, FARMING ESSAY , THIRUKKURAL FARMER, THIRUKKURAL CULTIVATION, SOCIAL RELEVANCE IN THIRUKKURAL, AGRICULTURE ESSAY IN THIRUKKURAL, EVERYDAY LIFE IN THIRUKKURAL, ECONOMICS IN THIRUKKURAL, ECONOMICAL THOUGHTS THIRUKKURAL ESSAY
திருக்குறளில் உழவர்கள், திருக்குறளில் உழவு, உழவர் குடியே உயர்ந்த குடி, உழவர்கள் குறித்து திருக்குறள், விவசாயம் திருக்குறள் கட்டுரை, பொருளாதாரம் திருக்குறள் கட்டுரை, நீர் பாதுகாப்பு திருக்குறள் கட்டுரை, மழை நீர் பாதுகாப்பு கட்டுரை, நீர் மேலாண்மை திருக்குறள் கட்டுரை, திருக்குறள் கட்டுரை TNPSC,
TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAYS
Good essay
ReplyDeleteI'M VISITING YOUR SITE DAILY. TAKING NOTES FOR GROUP2 MAINS TNPSC
ReplyDeleteTHANKS FOR UPLOADING
MY ALL TIME FAVOURITE BOOK - NOT BOOK , THIRUKKURAL IS MY NEXT TO HEART
ReplyDelete