THIRUKKURAL ESSAYS

Thirukkural essays : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural

Saturday, July 3, 2021

வள்ளுவத்தின் வழி குற்றமும் தண்டனையும் Crimes and Punishments





முன்னுரை:

      சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்களது வலிமையை பிறருக்கு எதிராக பயன்படுத்தும்போது அது குற்றமாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்த குற்றத்திற்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் குற்றமாக கருதப் பட்ட செயல்கள் மற்றொரு காலத்தில் குற்றமாக கருதப்படாத இருக்கலாம், ஒரு காலத்தில் குற்றமாக கருதப்படாது செயல்கள் மற்றொரு காலத்தில் குற்றமாக கருதப் படலாம். ஆக குற்றம் என்பது அந்தந்த காலத்தில் வாழும் இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி, அதனால் திருக்குறளில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றங்களும், அதற்குரிய தண்டனைகளும் அக்காலத்தில் குற்றங்கள் நடைபெற்றன எனவும் அதற்கு தண்டனைகள் வழங்கப்பட்டன என்பதையும் உறுதி செய்கின்றன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள குற்றத்தையும் தண்டனையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.


கொடியார்களுக்கு வழங்கும் தண்டனை :

     மன்னிக்கப்படாத குற்றங்களை செய்தவருக்கு கொலை தண்டனை அதாவது மரண தண்டனை உண்டு என்பதை வள்ளுவர் கூறியிருக்கின்றார். இதனை,

     "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

      களைகட் டதனொடு நேர்"


என்ற குறட்பா விளக்குகின்றது. அதாவது கொடிய செயல்களை செய்பவர் களை அரசன் மரண தண்டனை கொடுத்து தண்டிப்பது நல்லவர்களைக் காப்பாற்றுவதற்கு. அது ஒரு உழவன் களைகளை நீக்கி பயிர்களை காத்தலுக்கு ஒப்பாகும்.


பிறன்மனை நயத்தல் :

     பிறருடைய மனைவியை விரும்புவரிடம் பகை, பாவம், அச்சம், பழி  என்ற நான்கு குற்றங்களும் நீங்காமல் நிற்கும் என்பதை,

     "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

     இகவாவாம் இல்லிறப்பான் கண்"


என்ற குறட்பா வலியுறுத்துகின்றது. பிறர் மனைவியை விரும்புவோருக்கு மரண தண்டனையை என்கிறார்.


களவாடுதல்:

    பிறர் பொருளை வஞ்சித்து களவாடுதல் குற்றமாகும். 

     "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கல்லார்க்கு

      தள்ளாது புத்தேள் உலகு"


என்ற குறட்பாவில் பிறர் பொருளைத் திருட்டுபவருக்கு, அரசின் தண்டனையால் உயிர் நீங்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.



பரத்தையர் ஒழுக்கம்:

   சங்க இலக்கியத்தை படைத்த சங்க இலக்கிய சான்றோர்களால் பரத்தமை ஒழுக்கம் கடிந்து உரைக்கப்படவில்லை. ஆனால் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நூலான திருக்குறள் பரத்தமை ஒழுக்கத்தை மிகவும் சாடுகிறது. 

     பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணல், சூது ஆகிய மூன்று பழக்கத்தை உடையவர்களிடம் திருமகள் விலகிக் கொள்வாள். அவர்கள் மிகுந்த துன்பத்தை அடைவார்கள் என்பதை,


     "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

      திருநீக்கப் பட்டார் தொடர்பு"


என்ற குறட்பா நிறுவுகின்றது. தொல்காப்பியர் நால்வகை நிலங்களுக்கும் பரத்தமை பிரிவு உண்டு என்கிறார். ஆனால் கால எல்லை குறிப்பிடப்படவில்லை. இந்த சமுதாயத்தில் பரத்தமை ஒழுக்கம் நல்லவர்களால் ஒதுக்கப்படும், அல்லோர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் இருக்கின்றது என்பதனை அறியலாம். ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பரத்தமை ஒழுக்கம் மேற்கொள்பவர்களுக்கு மரண தண்டனை உண்டு என்பதை வள்ளுவர் கூறுவதாக கூறுகின்றார்.


கள்ளுண்ணல்:

    கள்ளுண்ணல் என்பது சங்ககாலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் கள்ளுண்ணல்ஐ பெரும் குற்றமாகக் கருதுகிறது. இதனை,

     "நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு"


      "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

      சான்றோர் முகத்துக் களி"


என்கின்ற குறட்பாக்கள் எடுத்தியம்புகின்றன. நாணம் என்ற குணத்தை கொண்டிருப்பவர்கள், கள்உண்ணுதல் என்னும் பெரும் குற்றத்தை செய்ய மாட்டார்கள். கள் உண்பவனை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் வெறுப்பாள். தன் தாயே குழந்தையை வெறுக்கும் பட்சத்தில் சான்றோர்களால் அவன் பெரிதும் ஒதுக்கப்பட்டவனாகவே கருதப்படுவான். 


[தென்றலின் சுவடுகள் என்ற நூலில், மது அருந்திய கணவன் நமது நாட்டின் பண்பாட்டுச் சின்னமாக
தாலியை, குடிக்க காசு இன்றி மனைவியின் கழுத்தில் இருந்து ஆறுத்தான் என்பதை,
           

          "குடிபோதையில்

            அறுத்தான்     

            கட்டியதாலி" 

                         -(தென்றலின் சுவடுகள்)


என்ற கவிதை வரியின் வாயிலாக புலப்படுத்துகின்றது. மதுவால் இன்று நாட்டின் ஒழுக்கம் சீர்கெட்டு தீய செயல்கள் அதிகரித்து வருகின்றன.]


புலால் உண்ணல்:

    ஆதிகாலந்தொட்டே வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை உணவாக உட்கொள்ளும் பழக்கம் மனிதர்களிடம் இருந்து வருகின்றது. அதேபோல் சங்ககால மக்கள் புலால் உணவினை விரும்பி உண்டனர். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் புலால் உண்பதை குற்றமாக கருதினர். இதனை வள்ளுவர்,
     

       "உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றின்‌

         புண்அது உணர்வார்ப் பெறின்"


என்கின்ற குறட்பாக்களின் மூலம் எடுத்துக் கூறுகிறார். உண் என்பது மற்றொரு உயிர்யின் புண் எனவும், அதை உண்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுவதுடன், புலால் உண்ணுவது இருத்தலே அறநிலை உடைய வாழ்வாகும். அந்நிலை கெடுமாறு புலால் உண்பவனின் தலை துண்டிக்கப்பட்டுதல் போன்ற துன்பத்தை அடைவர் என்று வள்ளுவர் எச்சரிக்கின்றார். சைவ சமயத்தினர் புலால் உண்பதை குற்றமாக கருதி அதனை அறவே வெறுக்கின்றனர்.


முடிவுரை:


தீக்கொளுவுவார்,
பிறருக்கு நஞ்சினை கொடுப்பவர்கள்,
கருவினை சீதைப்பவர்கள்,
கள்வர்,
சூறை கொள்வர்,
பிறருடைய மனைவியை விரும்புபவர்கள்
      போன்ற மன்னிக்க முடியாத குற்றங்களை செய்பவர்களுக்கு மரண தண்டனையை தீர்வு என்பதனை வள்ளுவம் மூலம் அறிய முடிகிறது. 
மேற்கூறிய செயல்பாடுகள் யாவற்றையும் வள்ளுவர் மிகப் பெரும் குற்றமாகவும், அக் கொடிய செயல்களை மேற்கொண்டால் உரிய தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றும் கூறி இருப்பதனை மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தெளிவாக நிரூபணம் செய்கின்றது.













GOOGLE SEARCH KEYWORDS:
குற்றமும் தண்டனையும் திருக்குறள் கட்டுரை, திருக்குறள் உணர்த்தும் குற்றம் தண்டனை, வள்ளுவத்தின் வழி குற்றமும் தண்டனையும், திருக்குறள் கட்டுரை குற்றம் பற்றி, தண்டனை பற்றி திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வியல் திருக்குறள், மானுட தாக்கம் திருக்குறள், அரசியல் நீதி திருக்குறள் கட்டுரை, சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, சமுதாயம் திருக்குறள் கட்டுரை, crimes and punishments in Thirukkural, Thirukkural essay English, crimes Thirukkural essay, punishment thirukkural essay, everyday life Thirukkural essay, court judgement thirukkural, King essay, ministers thirukkural essay, democracy thirukkural essay, essay about Thirukkural, impact of humanity thirukkural, social relevance thirukkural essay

1 comment: